வளைகுடா செய்திகள்

ஓமான் கொரோனா அப்டேட் (செப்டம்பர் 10, 2020): பாதிக்கப்பட்டோர் 398 பேர் ..!! 11 பேர் உயிரிழப்பு..!!

ஓமானில் இன்று (செப்டம்பர் 10,2020) புதிதாக 398 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் ஓமானில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 88,337 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், புதிதாக 11 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் இதனால் ஓமானில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 762 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 83,325 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!