அமீரக செய்திகள்

துபாய் வரும் பயணிகளுக்கான சமீபத்திய வழிமுறைகளை வெளியிட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்..!!

இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து குடியிருப்பாளர்கள் அமீரகம் வர அனுமதித்ததைத் தொடர்ந்து துபாய் வரும் பயணிகளுக்கான சமீபத்திய பயண வழிமுறைகளை துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் புதன்கிழமை தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

அமீரக குடியிருப்பாளர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்புடைய அதிகாரிகளால் வழங்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்கும் செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்ஸ் விசா உள்ள அனைத்து பயணிகளும் அமீரகத்திற்கு திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் பயணிகள் தடுப்பூசி போடப்பட்டதிலிருந்து குறைந்தது 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும்.

டிரான்சிட் பயணிகள்

டிரான்சிட் பயணிகள் தங்கள் இறுதி இலக்கு தேவைகளுக்கு ஏற்ப புறப்படுவதற்கு 72 மணிநேரம் அல்லது அதற்கு குறைவாக எடுக்கப்பட்ட PCR சோதனைக்கான எதிர்மறை சோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கீழ்ககண்ட பிரிவில் உள்ள தடுப்பூசி போடாத பயணிகளும் அமீரகம் திரும்பலாம்:

கோல்டன் மற்றும் சில்வர் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அரசுப்பிரதிநிதிகள் 

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட அனைத்து சுகாதாரப் பணியாளர்கள் 

பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் படிக்கும் மாணவர்கள் உட்பட கல்வித் துறை ஊழியர்கள் 

அரசு ஊழியர்கள்

எக்ஸ்போ 2020 இன் ஸ்பான்சர்ஷிப்பில் இருக்கும் கண்காட்சியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள்

அனைத்து பயணிகளும் கடைபிடிக்க வேண்டியவை:

துபாய் விசா வைத்திருப்பவர்கள் வசிப்பிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்கள் (GDRFA) பொது இயக்குநரகம் மூலம் முன் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பயணிகள் தங்களது விமானம் புறப்படுவதற்கு முன் சோதனைக்கான மாதிரி சேகரிக்கும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட செல்லுபடியாகும் எதிர்மறை PCR சோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

அசல் அறிக்கையுடன் இணைக்கப்பட்ட QR குறியீட்டை வழங்கும் சான்றளிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து பெறப்பட்ட கொரோனா PCR சோதனை அறிக்கைகள் மட்டுமே ஏற்கப்படும்.

பயணிகள் தங்கள் விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு கொரோனா ரேபிட் சோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும்.

பயணிகள் துபாய்க்கு வந்தவுடன் மற்றுமொரு PCR சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!