அமீரக செய்திகள்
துபாய் ஏர்போர்ட் செல்பவர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்த காவல்துறை அறிவுறுத்தல்…!!
அமீரகத்தில் எதிர்வரும் ஈத் அல் அதா விடுமுறையை ஒட்டி, உள்வரும் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகளால் அதிக கூட்டம் எதிர்பார்க்கப்படுவதால், துபாய் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு ட்விட்டரில் துபாய் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், விமான பயணிகளுக்கு டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 3 க்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.