சவூதியில் தென்பட்டது பிறை.. நாளை முதல் துவங்கும் ரமலான்.. அறிவிப்பை வெளியிட்ட சவூதி..!!
சவூதி அரேபியாவில் இன்று (மார்ச் 10) ஞாயிற்றுக்கிழமை ரமலான் மாத பிறையை பார்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட நிலையில் இன்று பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று ஷபான் மாதத்தின் கடைசி நாள் என்றும் நாளை மார்ச் 11-ம் தேதி (திங்கள்) ரமலான் மாதத்தின் முதல் நாளாக இருக்கும் என்றும் சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி தெரிவித்துள்ளது.
பொதுவாக இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதம் ஆகும். இருப்பினும் இது பிறை பார்ப்பதின் அடிப்படையிலேயே உறுதி செய்யப்படும்.
ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகுடா நாடுகள் சவூதி அரேபியாவையே பின்பற்றும் என்பதால் அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் நாளை ரமலான் முதல் நாளாக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
BREAKING NEWS | The crescent moon has been sighted in Saudi Arabia.
Therefore, Ramadhān 1445 will begin tonight.May Allāh ﷻ accept our siyām, qiyām & acts of worship and may He grant us the ability to utilise the precious moments of this Blessed month to engage in that which… pic.twitter.com/6QYw7IpoMK
— 𝗛𝗮𝗿𝗮𝗺𝗮𝗶𝗻 (@HaramainInfo) March 10, 2024
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel