அபுதாபியை தளமாகக் கொண்டு செயல்படும் எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் குறிப்பிடத்தக்க லாபங்களுடன் அதன் வரலாற்றில் சிறப்பான செயல்திறனைப் பதிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கு வரிக்குப் பிந்தைய லாபம் 1.7 பில்லியன் திர்ஹம்ஸ் ($463 மில்லியன்) வரை பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 26% அதிகரிப்பு ஆகும்.
மேலும், நிறுவனத்தின் மொத்த வருவாய் 18% சதவீதம் அதிகரித்து 21.7 பில்லியன் திர்ஹம்ஸ் ஆக உயர்ந்தது, இது பயணிகள் மற்றும் சரக்கு நடவடிக்கைகள் இரண்டிலும் வலுவான வளர்ச்சியால் இயக்கப்படுகிறது. மேலும் எதிஹாட் தனது திறனை விரிவுபடுத்தி அதன் உலகளாவிய நெட்வொர்க்கை வலுப்படுத்தியதால் பயணிகள் வருவாய் 20% உயர்ந்து 18.2 பில்லியன் திர்ஹம்ஸ் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், சரக்கு வருவாய் 8% உயர்ந்து 3.2 பில்லியன் திர்ஹம்ஸ் ஆக உயர்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, விமான நிறுவனத்தின் இயக்க செயல்திறனும் புதிய உச்சங்களை எட்டியுள்ளது. குறிப்பாக, EBITDA 27% உயர்ந்து 4.3 பில்லியன் திர்ஹம்ஸ் ஆக உயர்ந்துள்ளது, இது லாபத்தை 20% ஆக உயர்த்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, எதிஹாட் ஜனவரி மற்றும் செப்டம்பர் 2025 க்கு இடையில் 16.1 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது. இது எதிஹாட் வரலாற்றிலேயே மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். இது ஆண்டுக்கு ஆண்டு 18% அதிகரிப்பைக் குறிக்கிறது.
இது குறித்து தெரிவிக்கையில் “இந்த ஆண்டு எதிஹாட்டின் செயல்திறன் ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது, சந்தையை விஞ்சி, ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த பயணிகள் வளர்ச்சியில் கிட்டத்தட்ட பாதியை உந்துகிறது,” என்று எதிஹாட் ஏர்வேஸின் தலைமை நிர்வாக அதிகாரி அன்டோனால்டோ நெவ்ஸ் கூறியுள்ளார். மேலும் வருவாய் உயர்வு, சாதனை பயணிகள் எண்ணிக்கை மற்றும் அதிகரித்து வரும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றுடன், எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel