ADVERTISEMENT

துபாய் வரும் இந்தியர்கள் தங்களின் பயணத்தை மாற்றியமைக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல்..!!

Published: 19 Apr 2024, 8:42 PM |
Updated: 19 Apr 2024, 8:47 PM |
Posted By: admin

இந்தியாவிலிருந்து துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிக்கும் அல்லது துபாய் வழியாக வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அவசர ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த ஆலோசனையில், துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) கனமழையால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக, இந்தியா உட்பட வெளிநாடுகளில் இருந்து துபாய்க்கு உள்வரும் விமானங்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக கட்டுப்படுத்தியுள்ளது.

ஆகவே, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் செயல்பாடுகள் மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் வரை அத்தியாவசியமற்ற பயணத்தை இந்திய பயணிகள் மாற்றியமைக்குமாறு அமீரகத்திற்கான இந்திய தூதரகம் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழைக்குப் பிறகு, துபாய் விமான நிலையத்தின் ஓடுதளம் நீரில் மூழ்கியதால், மொத்தம் 1,244 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் 41 விமானங்கள் அருகிலுள்ள மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

எவ்வாறாயினும், பயணிகள் அந்தந்த விமானங்களின் புறப்படும் தேதி மற்றும் நேரம் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களிடம்  உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே விமான நிலையத்திற்கு வருமாறு துபாய் விமான நிலைய அதிகாரிகள் பயணிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், துபாய் விமான நிலையத்தில் சிக்கித்தவிக்கும் இந்திய குடிமக்களுக்கு உதவுவதற்காக, அவசர உதவி எண்களும் கடந்த புதன்கிழமை முதல் செயல்பாட்டில் இருப்பதாக துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

24×7 உதவி எண்கள்: 971501205172, 971569950590, 971507347676, மற்றும் 971585754213.

 

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel