ADVERTISEMENT

அமீரகத்தில் அடிப்படை உணவுப் பொருட்கள் குறித்து கவலை வேண்டாம்.!! போதுமான அளவு இருப்பதை உறுதிப்படுத்திய அமைச்சகம்.!!

Published: 2 Mar 2026, 7:51 AM |
Updated: 2 Mar 2026, 7:51 AM |
Posted By: admin

ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போரில் ஐக்கிய அரபு அமீரகமும் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில், நாட்டில் அடிப்படை உணவுப் பொருட்களின் இருப்பு குறித்த கவலை குடியிருப்பாளர்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில் அமீரகம் முழுவதும் உள்ள சந்தைகளில் அடிப்படை உணவுப் பொருட்கள் “போதுமான அளவில்” கிடைப்பதை ஐக்கிய அரபு அமீரகம் நேற்று மார்ச் 1 ஆம் தேதி உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மேலும், நாடு முழுவதும் உணவுப் பொருட்கள் விநியோகத்தில் இடையூறுகள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை என்று நாட்டின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியது. அத்துடன் “மிகவும் திறமையான மற்றும் விரிவான” சந்தை இருப்புகளை அமீரகம் கொண்டுள்ளது என்றும், இது தொடர்ச்சியான நீண்டகால விநியோகத்தை உறுதி செய்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சந்தைகள் அல்லது எந்த எமிரேட்டிலும் உணவு அல்லது உணவு அல்லாத பொருட்களுக்கு தற்போது பற்றாக்குறை இல்லை, நாட்டின் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் போதுமான அளவுகளிலும் நீண்ட காலத்திற்கு போதுமானதாகவும் கிடைப்பதை ‘போதுமான இருப்பு’ உறுதி செய்கின்றன என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் இறக்குமதி “தேவையான மற்றும் திட்டமிட்டபடி” நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், சப்ளையர்கள் வணிக மையங்களில் சரக்கு நிலைகளை தினமும் கண்காணித்து வருவதாகவும், ஒவ்வொரு பொருளின் போதுமான அளவு குறித்து முழுமையான பகுப்பாய்வுகளை அதிகாரிகள் நடத்தி வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று பிப்ரவரி 28 முதல் ஈரானிய தாக்குதல் தொடங்கியதிலிருந்து அமீரக விமானப்படை மற்றும் விமானப் பாதுகாப்புப் படைகள் இதுவரை 165 பாலிஸ்டிக் ஏவுகணைகள், இரண்டு கப்பல் ஏவுகணைகள் மற்றும் 541 ஈரானிய ட்ரோன்களை வெற்றிகரமாக கையாண்டுள்ளதாக அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பே முதன்மையானது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியது.

அத்துடன், அமீரகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்பான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களை நம்பியிருக்கவும், சரிபார்க்கப்படாத அறிக்கைகள், வீடியோக்கள் அல்லது வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்கவும் அமைச்சகம் பொதுமக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் பிற முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel