அமீரகத்தின் இந்த விமான நிலையங்களுக்கு பயணிப்பவர்களுக்கு 10 நாள் தனிமைப்படுத்தல் கட்டாயம்..!! ஏர் இந்தியா சுற்றறிக்கை..!!
இந்தியாவில் இருந்து அபுதாபி மற்றும் ராஸ் அல் கைமாவுக்கு பயணிக்கும் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் 10 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயண முகவர்களுக்கு வழங்கப்பட்ட சுற்றறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்த இரண்டு விமான நிலையங்களில் இறங்கும் பயணிகள் தனிமைப்படுத்தல் காலத்தில் கண்காணிப்பு சாதனத்தை அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் நான்காவது மற்றும் எட்டாவது நாட்களில் PCR சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (GCAA) வெளியிட்ட பாதுகாப்பு சுற்றறிக்கையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு 10 நாள் தனிமைப்படுத்தல் காலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
துபாய் மற்றும் ஷார்ஜாவுக்குப் பயணிக்கும் பயணிகள் விமான நிலையம் வந்திறங்கியவுடன் கண்டிப்பாக PCR சோதனை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.
இந்த இரண்டு விமான நிலையங்களுக்கும் வந்த பயணிகள் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட சோதனையிலிருந்து எதிர்மறையான சோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று, ஆகஸ்ட் 5 முதல், ஐக்கிய அரபு அமீரகத்தில் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற குடியிருப்பாளர்கள்; மற்றும் தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடப்படாத சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மனிதாபிமான வழக்குகள் மற்றும் மத்திய மற்றும் உள்ளூர் அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டாவில் இருந்து UAE க்கு பறக்கலாம்.
தகுதியுள்ள பயணிகள் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்கள் (துபாயில் வழங்கப்பட்ட விசா வைத்திருப்பவர்கள்) பொது இயக்குநரகத்திடம் (GDRFA) ஒப்புதல் பெற வேண்டும்.
துபாய் தவிர்த்து மற்ற எமிரேட்ஸில் வழங்கப்பட்ட விசா வைத்திருப்பவர்கள் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான கூட்டாட்சி ஆணையத்திடம் (ICA) இருந்து ஒப்புதல் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் விமானத்தில் பயணிப்பதற்கு முன் 48 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட PCR சோதனையின் எதிர்மறையான முடிவு அறிக்கையை வைத்திருப்பதும் கட்டாயமாகும்.
இந்த சோதனை ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தால் நடத்தப்பட்டிருக்க வேண்டும் மற்றும் ஒரு QR குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏறுவதற்கு முன் பயணிகள் ரேபிட் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.