UAE: முஸ்லீம் அல்லாதவர்களுக்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமீரகம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரும், அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்த புதிய ஆணையின்படி, அபுதாபியில் சிவில் சட்டத்தின் கீழ் முஸ்லிம் அல்லாதவர்களுக்கான திருமணம், விவாகரத்து மற்றும் குழந்தை வளர்ப்பு போன்றவற்றில் இருவருக்குமான கடமைகள், சொத்து விவகாரங்கள் போன்றவற்றிற்கான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
இந்த சட்டமானது திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், குழந்தைப் பாதுகாப்பு மற்றும் தந்தைவழிச் சான்று மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஆணை கூறியுள்ளது.
>> புதிய சட்டத்தின்படி, முஸ்லீம் அல்லாத குடும்ப விவகாரங்களைக் கையாள புதிய நீதிமன்றம் அபுதாபியில் அமைக்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் செயல்படும்.
>> புதிய சட்டம் 20 கட்டுரைகளைக் கொண்டுள்ளது, இது திருமணம், விவாகரத்து, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பரம்பரை ஆகியவற்றை உள்ளடக்கிய பல அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
>> கணவன் மற்றும் மனைவி இருவரின் விருப்பத்தின் அடிப்படையில் திருமணங்கள் என்ற கருத்தை சட்டம் அறிமுகப்படுத்துகிறது. இதன் பொருள் பெண்ணின் குடும்பத்தின் ஒப்புதல் தேவையில்லை.
>> திருமணத்தில் தீங்கிழைக்கப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமின்றி விவாகரத்து செய்வதற்கான உரிமையை மனைவிகளுக்கு சட்டம் வழங்குகிறது, மேலும் விவாகரத்துக்கான உரிமையை வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் பயன்படுத்தலாம். முன்னதாக, விவாகரத்து பெற தீங்கிழைத்ததற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும் இல்லையெனில் விவாகரத்து வழங்கப்படாது.
>> புதிய சட்டத்தின்படி, முஸ்லீம் அல்லாத தம்பதிகளுக்கு இடையேயான விவாகரத்து இப்போது குடும்ப வழிகாட்டுதல் துறைக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி முதல் விசாரணையில் (hearing) வழங்கப்படலாம் மற்றும் பிரிந்து செல்லும் தம்பதிகள் இனி கட்டாய சமரச அமர்வுகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
> மனைவியின் ஜீவனாம்சம் அல்லது நிதி உரிமைகள் திருமணமான வருடங்களின் எண்ணிக்கை, மனைவியின் வயது, வாழ்க்கைத் துணைவர்கள் ஒவ்வொருவரின் பொருளாதார நிலை மற்றும் பிற கருத்துக்கள் போன்ற பல அளவுகோல்களின் அடிப்படையில் அமையும்.
>> இந்த சட்டத்தின் கீழ், குழந்தையின் உளவியல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், குழந்தையின் மீதான விவாகரத்தின் விளைவுகளை குறைக்கவும் குழந்தைகளின் பாதுகாப்பு பெற்றோரிடையே சமமாக பகிர்ந்து கொள்ளப்படும்.
>>முஸ்லிம் அல்லாதவர்களுக்கான உயில்களை பதிவு செய்தல் மற்றும் ஒரு வெளிநாட்டவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் அவர்விரும்பியவருக்குப் பகிர்ந்தளிப்பதற்கான உயிலை வரைவதற்கான உரிமை போன்ற பரம்பரைச் சிக்கல்களையும் இந்த சட்டம் தீர்க்கிறது.