27,000 திர்ஹம் ரொக்கப் பரிசை வெல்ல புதிய சவாலை அறிவித்துள்ள குளோபல் வில்லேஜ்!! இதுதான் புது சேலஞ்ச்…!!
துபாயின் மிக பிரபலமான குளோபல் வில்லேஜ் கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு புதிய சவாலை பார்வையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த சவாலில் பங்கேற்கும் நபர்கள் சுமார் 27,000 திர்ஹம் ரொக்கப் பரிசை வெல்லக்கூடிய வாய்ப்பை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘Wonder Rides’ என்று அழைக்கப்படும் இந்த சவால், Happiness Fest என்ற விழாவின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா, கியூபா, மெக்ஸிகோ, ஜப்பான், தாய்லாந்து மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் இருந்து சில ஐகானிக் டாக்ஸிகளில் சவாரி மேற்கொள்ள பங்கேற்பாளர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும், காரில் ஏறியதும் பின் இருக்கையில் சில பொழுதுபோக்கு சவால்களை பங்கேற்பாளர்கள் எதிர்கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கொடுக்கப்பட்ட சவால்களை முடிக்கும் பங்கேற்பாளர்கள் 27,000 திர்ஹம்களை வெல்லும் வாய்ப்பிற்காக ரேஃபிள் டிராவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மகளிர் தினமான மார்ச் 8 அன்று, குளோபல் வில்லேஜ் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக ‘Happiness Street Fest – Women’s Edition’ தொடங்கப்பட்டுள்ளது. மேலும், உலகெங்கிலும் உள்ள 10 தெருக் கலைஞர்கள் மற்றும் கலைஞர்களின் தனித்துவமான நடைமுறைகள் மார்ச் 20 திங்கட்கிழமை சர்வதேச மகிழ்ச்சி தினம் வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.