அமீரக செய்திகள்

ரமலான் 2023: உணவகங்கள் பெற வேண்டிய அனுமதி, பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட ஷார்ஜா..!!

ரமலான் மாதம் துவங்க இன்னும் ஓரிரு வாரங்களே இருக்கும் நிலையில் ஷார்ஜாவில் உள்ள அதிகாரிகள் ரமலான் மாதத்தின் போது உணவகங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களையும் உணவகங்களுக்கு வழங்கப்படும் அனுமதிகளுக்கான கட்டணங்களையும் தற்பொழுது அறிவித்துள்ளனர்.

ஷார்ஜா முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இரண்டு வகையான அனுமதிகள் உணவகங்களுக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று, பகலில் உணவு தயாரிப்பதற்கான காட்சிகள் மற்றும் ஷாப்பிங் சென்டர்களில் இருக்கும் உணவகங்கள் உட்பட அனைத்து உணவகங்களிலும் உணவுகளை காட்சிப்படுத்துவது என கூறப்பட்டுள்ளது. இந்த அனுமதிக்கான கட்டணம் 3,000 திர்ஹம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றொன்று நோன்பு திறக்கக்கூடிய நேரமான இஃப்தார் சமயங்களில் உணவகங்களின் முன் சிற்றுண்டிகளை காட்சிப்படுத்துவதாகும். இந்த அனுமதிக்கான கட்டணம் 500 திர்ஹம்ஸ் என்று கூறப்பட்டுள்ளது.

உணவக உரிமையாளர்கள் அல்லது மேலாளர்கள் ஷார்ஜா நகராட்சியின் புறநகர் விவகாரத் துறை, தொழில்துறை பகுதி 5 இல் உள்ள உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு கவுண்டரில் இந்த அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்  ரமலான் மாதத்தில் உணவுகளை காட்சிப்படுத்துவதற்கான பொதுவான வழிகாட்டுதல்களையும் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

அவை

>> பகலில் செயல்படும் உணவகங்களுக்கான வழிமுறைகள்:

• சாப்பிடும் பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை.

• உணவு தயாரித்தல் மற்றும் சமைப்பது சமையலறைகளுக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

>> வளாகத்தின் முன் உணவைக் காட்சிப்படுத்த: 

. உணவகங்கள் தங்கள் வளாகத்திற்கு முன்னால் உள்ள நடைபாதையில் உணவைக் காட்சிப்படுத்தலாம்.

• மூடிய கண்ணாடிப் பெட்டியில் (குறைந்தபட்சம் 100செ.மீ. உயரம்) கொண்டு உணவு காட்டப்பட வேண்டும்.

• தின்பண்டங்கள் துருப்பிடிக்காத எஃகு கொள்கலன்களில் வைக்கப்பட வேண்டும்.

• உணவை அலுமினியத் தகடு அல்லது பிளாஸ்டிக் மடக்கினால் மூட வேண்டும்.

• தின்பண்டங்களை தகுந்த வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும்

Related Articles

Back to top button
error: Content is protected !!