அமீரக செய்திகள்

UAE: ரமலான் மாதத்திற்கான புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை அறிவித்த துபாய்..!!

புனித ரமலான் மாதம் விரைவில் துவங்கவிருப்பதை முன்னிட்டு கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துபாய் வெளியிட்டுள்ளது.

துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சக் குழுவானது ரமலான் மாதத்தில் பின்பற்ற வேண்டிய புதுப்பிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அவை

  • அதிகளவில் மக்கள் ஒன்று கூடும் கூட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் ஆகியோருக்கு கொரோனா பரவுவதற்கான அபாயங்களை தவிர்க்க கூட்டமாக ஒன்றிணைவதை தவிர்க்க வேண்டும்.
  • ரமலான் கூடாரங்கள் மற்றும் இப்தார் நடைபெறும் கூடாரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் துபாயில் உள்ள மசூதிகளில் தாராவீஹ் தொழுகை நடத்தலாம்.
  • இஷா மற்றும் தராவீஹ் தொழுகை ஆகிய இரண்டும் நடைபெற அதிகபட்ச காலம் 30 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்படும்.

ரமலான் மாதத்தின் 10 நாட்களில் நிகழ்த்தப்படும் கியாம் உல்- லைல் தொழுகையானது கொரோனா தொடர்பான நிலைமையின் மதிப்பீட்டின் அடிப்படையில் பின்னர் அறிவிக்கப்படும் என்று குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை ஆணையம் (NCEMA) அறிவித்த வழிகாட்டுதல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!