அமீரக செய்திகள்

கம்பீரமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் ஒளிர்ந்த இந்திய தேசியக் கொடி!! இந்தியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வீடியோ வெளியீடு…

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா செவ்வாய்க்கிழமையன்று, இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், மூவர்ணக் கொடியின் வர்ணங்களில் ஒளிர்ந்தது. புர்ஜ் கலீஃபா அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கில், இந்தியக் கொடியின் வண்ணங்களில் ஒளிரும் கட்டிடத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் உலக நாடுகளின் சிறப்பு மிக்க நாடுகளில் அந்நாட்டு தேசிய கொடி நிறத்தில் ஒளிரும் புர்ஜ் கலீஃபாவானது நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண கொடியில் மிளிர்ந்தது.

மேலும், இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது. அந்த பதிவில் “புர்ஜ்கலிஃபா இந்திய அரசை அவர்களின் சுதந்திர தினத்தில் நினைவுகூர்கிறது. உங்கள் தேசத்தின் வளமான வரலாற்றையும் மாறுபட்ட கலாச்சாரத்தையும் நீங்கள் கொண்டாடும்போது கொண்டாட்டம் மற்றும் பெருமை நிறைந்த ஒரு நாளைக்கு இந்திய மக்களை வாழ்த்துகிறது. ஒற்றுமை மற்றும் செழிப்புடன் இந்தியா தொடர்ந்து பிரகாசமாக பிரகாசிக்கட்டும். இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளது.

முந்தைய நாள், எமிராட்டி விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயதி அவர்கள், இந்தியர்களுக்கு அவர்களின் சுதந்திர நாளில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட நாட்டின் புகைப்படத்துடன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!