துபாய் பஸ்ஸில் பயணிப்பதற்கு முன்பு இந்த ரூல்ஸ் எல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!! RTA கோடிட்டுக் காட்டும் இருபது விதிகளும் அபராதங்களும்…!!
நீங்கள் அடிக்கடி துபாய் பொதுப் பேருந்தை பயன்படுத்துபவராக இருந்தால், நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விதிகள் மற்றும் நெறிமுறைகள் உள்ளன. பயணிகளுக்கு இந்த விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, RTA பேருந்தில் பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
எமிரேட்டில் பொதுப் பேருந்துகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் பின்வரும் RTAவின் விதிகளை மனதில் கொள்ள வேண்டும்:
1. நோல் கார்டை ரீசார்ஜ் செய்து வைத்திருத்தல்
நீங்கள் எப்போதும் பொதுப் பேருந்தில் உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், உங்கள் நோல் கார்டில் போதுமான இருப்பு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். RTA விதிகளின் படி, பயணிகள் ஒரு வழி பயணத்திற்கு குறைந்தபட்சம் 7 திர்ஹம் மற்றும் இருவழி பயணத்திற்கு 14 திர்ஹம் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
சில பேருந்து நிறுத்தங்கள் மற்றும் அனைத்து மெட்ரோ நிலையங்களில் உள்ள கட்டண கியோஸ்க்களில் உங்கள் நோல் கார்டை எளிதாக டாப் அப் செய்யலாம் அல்லது nolPay ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.
2. நோல் கார்டு இ-கார்டு மெஷின் ரீடரில் தவறாமல் tap செய்யவும்.
நீங்கள் பேருந்தில் ஏறியதும், உங்கள் பயணத்தை பதிவு செய்ய ஓட்டுநர் இருக்கைக்கு அடுத்துள்ள கார்டு ரீடரில் உங்கள் நோல் கார்டை tap செய்ய வேண்டும். உங்கள் நிறுத்தத்தை அடைந்ததும், கார்டை மீண்டும் தட்டினால், உங்கள் பயணத்திற்கான தொகை தானாகவே கார்டிலிருந்து கழிக்கப்படும். அவ்வாறு செய்யத் தவறினால் உங்களுக்கு 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
3. உணவு மற்றும் பானங்களை உட்கொள்ள அனுமதி இல்லை:
துபாயில் பொதுப் பேருந்தில் சாப்பிடுவது அல்லது குடிப்பது செயல்பாடுகளை மேற்கொண்டால், 100 திர்ஹம் செலுத்த நேரிடும்.
4. ஓட்டுநரிடம் பேச்சு கொடுக்க வேண்டாம்:
RTAவின் படி, வாகனம் ஓட்டும் போது, பொது போக்குவரத்து வாகனங்கள் அல்லது சேவைகளின் ஓட்டுநருக்கு ஏதேனும் கவனச்சிதறல் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேச்சுக் கொடுக்க கூடாது. மீறினால் 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படலாம். உங்களுக்கு பயணம் தொடர்பான ஏதேனும் கேள்விகள், புகார்கள் அல்லது விசாரணைகள் இருந்தால், 800 9090 என்ற எண்ணில் நீங்கள் RTA கால் சென்டரைத் தொடர்பு கொள்ளலாம்.
5. தொலைத்த பொருட்களைப் புகாரளிக்கலாம்
பேருந்தில் ஏதேனும் பொருளை தொலைத்துவிட்டீர்கள் என்றால், உடனடியாக துபாய் காவல்துறையின் அவசரமற்ற ஹாட்லைனை 901 இல் தொடர்பு கொள்ளவும். மாற்றாக, 800 9090 என்ற எண்ணில் RTA கால் சென்டரைத் தொடர்பு கொள்ளலாம்.
இவை தவிர, பேருந்துகளின் முன்பகுதியில் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு பேருந்துக்குள் குறிப்பிட்ட நபர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், பெண்கள் அமரும் பகுதிகள் போன்றவற்றில் நுழைந்தாலோ அல்லது உட்கார்ந்தாலோ 100 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
இதேபோல், துபாயில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது தொடர்பான 20 வகையான விதிமீறல்கள் உள்ளன. RTA இன் படி, அபராதங்களின் முழுமையான பட்டியல் இங்கே:
- உரிய கட்டணத்தைச் செலுத்தாமல் பொதுப் போக்குவரத்து முறைகள், வாகனங்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துதல் அல்லது கட்டண மண்டலங்களுக்குள் நுழைதல்: 200 திர்ஹம்
- கோரிக்கையின் பேரில் ஒரு நோல் கார்டை வழங்கத் தவறினால்: 200 திர்ஹம்
- வேறொருவரின் தனிப்பட்ட நோல் கார்டைப் பயன்படுத்துதல்: 200 திர்ஹம்
- காலாவதியான கார்டைப் பயன்படுத்துதல்: 200 திர்ஹம்
- தவறான கார்டைப் பயன்படுத்துதல்: 500 திர்ஹம்
- போலி கார்டைப் பயன்படுத்துதல்: 200 திர்ஹம்
- RTA இலிருந்து முன் அனுமதி பெறாமல் நோல் கார்டுகளை விற்பனை செய்தல்: 500 திர்ஹம்
- பொதுப் போக்குவரத்து வாகனங்களின் அமைப்புகள், கருவிகள் அல்லது இருக்கைகளை நாசப்படுத்துதல் அல்லது சேதப்படுத்துதல்: 200 திர்ஹம்
- துப்புதல், குப்பை கொட்டுதல், பொது போக்குவரத்து முறைகள், வசதிகள் மற்றும் சேவைகளை மாசுபடுத்தும் எந்த செயலிலும் ஈடுபடுதல்: 100 திர்ஹம்
- பொதுப் போக்குவரத்து முறைகள், வசதிகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எந்த வகையிலும் சிரமத்தை ஏற்படுத்துதல்: 200 திர்ஹம்
- பொது போக்குவரத்து முறைகள், வசதிகள் மற்றும் சேவைகளுக்குள் புகைத்தல்: 200 திர்ஹம்
- பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஆயுதங்கள், கூர்மையான பொருட்கள் அல்லது எரியக்கூடிய பொருட்கள் உள்ளிட்ட வசதிகள் மற்றும் அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லுதல்: 200 திர்ஹம்
- பொது போக்குவரத்து சேவைகளில் மது அருந்துதல்: 200 திர்ஹம்
- பொது போக்குவரத்து சேவைகளில் பொருட்களை விற்பனை செய்தல் அல்லது எந்த வகையான பிரச்சாரம் மூலம் அதை விளம்பரப்படுத்துதல்: 200 திர்ஹம்
- பொதுப் பேருந்துகளின் கதவைத் திறப்பது அல்லது நிலையங்களுக்கு இடையே இயக்கத்தின் போது அல்லது பார்க்கிங் செய்யும் போது திறந்து விடுவது: 100 திர்ஹம்
- மற்ற பயணிகளுக்கு எரிச்சலூட்டும் அல்லது அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் அல்லது உபகரணங்களை எடுத்துச் செல்லுதல் அல்லது பயன்படுத்துதல்: 100 திர்ஹம்
- பேருந்து நிறுத்தங்க்ளில் உறங்குதல்: 300 திர்ஹம்
- வாகனம் ஓட்டும் போது ஒரு பொதுப் போக்குவரத்து ஓட்டுநரின் கவனத்தை சிதற அல்லது பார்வைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுதல்: 200 திர்ஹம்
- பயணிகளின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்படாத பொதுப் போக்குவரத்து சேவைகளில் நிற்பது அல்லது அமர்ந்திருப்பது: 100 திர்ஹம்
- தடைசெய்யப்பட்ட இடங்களில் உண்பது மற்றும் குடிப்பது: 100 திர்ஹம்
அபராதம் செலுத்துவது எப்படி?
மேற்கூறப்பட்ட விதிகளில் ஏதேனும் ஒன்றை கடைபிடிக்கத் தவறினால், நீங்கள் பின்வரும் வழிகளில் அபராதத்தை செலுத்தலாம்:
- அல் பர்ஷா, அல் மனாரா, அல் கிஃபாஃப் மற்றும் அல் துவாரில் உள்ள மகிழ்ச்சி மையத்தைப் பார்வையிடுங்கள்.
- அபராதம் வழங்கப்பட்ட பிறகு, ஆய்வாளரிடம் நேரடியாகச் செலுத்தவும்.
- அறிவு மற்றும் கண்டுபிடிப்புக் கட்டணமாக 20 திர்ஹம் உங்கள் அபராதத்துடன் வசூலிக்கப்படும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel