துபாய் மற்றும் ஷார்ஜா இடையே மீண்டும் தொடங்கப்பட்ட இன்டர்சிட்டி பேருந்து சேவை.. வழித்தடங்களையும் வெளியிட்ட RTA..!!
கடந்த வாரம் அமீரகத்தை வரலாறு காணாத பெருமழை தாக்கியதைத் தொடர்ந்து, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாய் மற்றும் ஷார்ஜா இடையேயான இன்டர்சிட்டி பஸ் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த சேவையானது தற்போது மீண்டும் தொடங்கப்படுவதாக RTA அறிவித்துள்ளது.
மேலும், துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிந இரண்டு எமிரேட்களுக்கும் இடையே பயணிக்கும் பயணிகள் வசதியான பயணத்தை அனுபவிப்பதற்காக பின்வரும் முக்கிய வழித்தடங்களையும் RTA கோடிட்டுக் காட்டியுள்ளது:
— வழித்தடம் E303 ஆனது துபாயில் உள்ள யூனியன் ஸ்கொயர் மெட்ரோ நிலையம் மற்றும் ஷார்ஜாவில் உள்ள அல் ஜுபைல் பஸ் நிலையம் இடையே இயக்கப்படும்.
— வழித்தடம் E307 ஆனது துபாயில் உள்ள தேரா சிட்டி சென்டர் பஸ் நிலையத்திற்கும் ஷார்ஜாவில் உள்ள அல் ஜுபைல் பஸ் நிலையத்திற்கும் இடையே இயக்கப்படும்.
— E307A வழித்தடமானது, துபாயில் உள்ள அபு ஹைல் மெட்ரோ நிலையத்திற்கும் ஷார்ஜாவில் உள்ள அல் ஜுபைல் பஸ் நிலையத்திற்கும் இடையே இயக்கப்படும்.
— E306 வழித்தடம் துபாயில் உள்ள அல் குபைபா பஸ் நிலையத்திலிருந்து ஷார்ஜாவில் உள்ள அல் ஜுபைல் பஸ் நிலையம் வரை இயக்கப்படும்.
— E315 வழித்தடம் எதிசலாட் மெட்ரோ நிலையம் மற்றும் ஷார்ஜாவில் உள்ள முவைலா பஸ் நிலையம் இடையே பயணிக்கும் பயணிகளுக்காக இயக்கப்படும்.
முன்னதாக ஏப்ரல் 18 அன்று, நாட்டில் நிலவிய நிலையற்ற வானிலை காரணமாக துபாய் மற்றும் பிற எமிரேட்டுகளுக்கு இடையிலான அனைத்து நகரங்களுக்கு இடையேயான பேருந்து இயக்கங்களை RTA தற்காலிகமாக தடை செய்திருந்தது. கனமழையால் பாதிக்கப்பட்டிருந்த ஷார்ஜாவில் தற்போது இயல்பு நிலை திரும்பி விட்டதால், துபாய் மற்றும் ஷார்ஜா இடையேயான இன்டர்சிட்டி பேருந்து சேவையை RTA மீண்டும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel