துபாயில் உள்ள பொதுப் பேருந்துகளை மெட்ரோ, டிராம் மற்றும் கடல் போக்குவரத்து போன்ற பிற வெகுஜன போக்குவரத்து முறைகளுடன் மேலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற வளர்ந்து வரும் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நகரின் பேருந்து நெட்வொர்க் மற்றும் நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
RTAவின் சமீபத்திய ‘Talk to Us’ என்ற விர்ச்சுவல் அமர்வில், அதிகாரிகள் பல முன்மொழிவுகள், கருத்துகள் மற்றும் யோசனைகளை பயணிகளிடமிருந்து பெற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விவாதங்களில் துபாயின் பல்வேறு பகுதிகளில் உள்ள உள் பேருந்து வழித்தடங்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள மற்ற எமிரேட்டுகளுடன் துபாயை இணைக்கும் நகரங்களுக்கு இடையேயான வழிகள் பற்றி விவாதிக்கப்பட்டது என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், துபாய் பஸ் நெட்வொர்க் மற்றும் இன்டர்சிட்டி பஸ் சேவையின் சாத்தியமான விரிவாக்கம் உட்பட பல அதிரடி ஆலோசனைகள் மற்றும் நுட்பங்களுடன் அமர்வு முடிந்தது என்று தெரிவித்த RTA, இந்த முன்மொழிவு பொது பேருந்து சேவைகளுக்கான வளர்ந்து வரும் தேவைக்கு பதிலளிப்பதுடன் நாடு முழுவதும் பயணிகளுக்கு மென்மையான மற்றும் திறமையான தினசரி பயணங்களை உறுதி செய்வதற்கு இத்தகைய ஒருங்கிணைப்பு இன்றியமையாதது என்று வலியுறுத்தியது.
RTA வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, ஜனவரி 2024 முதல் ஜூன் 2024 வரை சுமார் 89.2 மில்லியன் பயணிகள் பேருந்துகளில் பயணித்துள்ளனர், இது 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மொத்த பொதுப் போக்குவரத்துப் பயணிகளின் எண்ணிக்கையில் 24.5 சதவீதமாகும்.
பீக் ஹவர் போக்குவரத்து நெரிசல் குறையும்
துபாயின் முக்கிய சாலைகளில் பீக்-ஹவர் போக்குவரத்தை 30 சதவீதம் குறைக்கக்கூடிய தொலைதூர மற்றும் நெகிழ்வான நேர வேலைக் கொள்கைகளை அமல்படுத்த இந்த மாத தொடக்கத்தில் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பேருந்து நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் திட்டம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel