அமீரக செய்திகள்

அமீரகத்தில் வேலை தேடுபவர்கள் முதலாளிகள் வழங்குவதை விட 30% அதிக சம்பளத்தைக் கோருவதாகத் தகவல்…..

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடி எண்ணற்ற நபர்கள் தொடர்ந்து வந்த போதிலும் வேலை தேடுபவர்கள் முதலாளிகள் வழங்குவதை விட 30% வரை அதிக சம்பளத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும், மூத்த பதவிகளுக்கு இதனை விட அதிகமாக எதிர்பார்ப்பதாகவும் ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக இந்த சம்பள ஏற்றத்தாழ்வு பெரும்பாலும் ஏற்படுகிறது, அதே நேரத்தில் முதலாளிகள் அதிக எண்ணிக்கையிலான திறமையாளர்களைக் கொண்டிருப்பதால், வேலை தேடுபவர்கள் பெரிய சம்பள உயர்வைப் பெறுவது சவாலாக உள்ளது.

*Naukrigulf Hiring Outlook Report* இன் படி,  பொதுவாக முதலாளிகள் வழங்க விரும்புவதை விட 15-30% ஊழியர்கள் அதிகமாகக் கேட்கிறார்கள். அதிக ஊதியத்திற்கான இந்த கோரிக்கை பெரும்பாலும் அமீரகத்தில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால் ஏற்படுகிறது, குறிப்பாக வீட்டுவசதி, கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் செலவினங்கள் அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த சில ஆண்டுகளில் மக்கள்தொகை அதிகரிப்பு இந்த செலவுகளை மேலும் அதிகரித்துள்ளது, Worldometers வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, அமீரகத்தின் மக்கள் தொகை 2021 இல் 9.789 மில்லியனிலிருந்து 2025 இல் 11.346 மில்லியனாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இருப்பினும், அமீரகத்தில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும், இது சம்பள உயர்வைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்றும் Naukrigulf கூறுகிறது. அதாவது, நாட்டில் வேலை விண்ணப்பதாரர்கள் அதிக ஊதியத்தை கோரும் அதே வேளையில், அதிக திறமை கொண்டவர்கள் இருப்பதால், செலவுகள் அதிகரித்து வந்தாலும், கணிசமான சம்பள உயர்வைப் பெறுவது அவர்களுக்கு கடினமாகி வருவதாகக் கூறப்படுகின்றது.

திறன் சார்ந்த பணிகளுக்கான தேவை அதிகம்

எவ்வாறாயினும், தகுதிவாய்ந்த நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக சில திறன் சார்ந்த பணிகளுக்கு கணிசமாக அதிக சம்பளம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக, ஐடி நிபுணர்கள், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் AI நிபுணர்கள் சராசரி சந்தை விகிதத்தை விட 25-50% அதிக சம்பளத்தை எதிர்பார்க்கலாம். SaaS மற்றும் fintech போன்ற உயர் வளர்ச்சியடைந்த தொழில்களில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர்களும் 20-30% அதிக சம்பள உயர்வுகளுக்கான பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திறன் பற்றாக்குறையின் விளைவாக, நிறுவனங்கள் பணியமர்த்துவதில் தாமதத்தை எதிர்கொள்கின்றன, சில பதவிகள் பல மாதங்களாக காலியாக உள்ளன. அடுத்த ஆறு மாதங்களில் 85% முதலாளிகள் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், இது 7% பேர் வேலைகளை குறைக்கக்கூடும் என்றும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

இதற்கிடையில், நடுத்தர நிலை நிபுணர்ளுக்கு அதிக தேவை இருப்பதாகவும், மொத்த பணியமர்த்தலில் 71 சதவீதம் பேர் இந்தப் பிரிவில் கவனம் செலுத்துவதாகவும் கணக்கெடுப்பு குறிப்பிட்டுள்ளது. திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறை ஒரு சவாலாகவே இருந்தாலும், மூத்த நிர்வாகப் பணிகளுக்கும் கணிசமான தேவை உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய துறைகளில் திறன் பற்றாக்குறை

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல துறைகள் திறமை பற்றாக்குறையால் போராடி வருவதாக அறிக்கை கூறியுள்ளதுடன் குறிப்பாக, கட்டுமானம், உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி போன்ற தொழில்களில், சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்கள் போன்ற பொறியியல் பணிகளுக்கு அதிக தேவை உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, சைபர் பாதுகாப்பு, AI, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் முழு-ஸ்டாக் மேம்பாடு உள்ளிட்ட தொழில்நுட்பம் தொடர்பான பணிகளும் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. குறிப்பாக லாஜிஸ்டிக்ஸ், கொள்முதல் (logitics, procurement) மற்றும் விநியோகச் சங்கிலி திட்டமிடல் (supply chain planning) ஆகியவற்றில், ஐக்கிய அரபு அமீரகம் உலகளாவிய வர்த்தக மையமாக அதன் நிலையை வலுப்படுத்துவதால், இந்த துறைகளில் அதிக தேவை உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!