சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று பிறை பார்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நாளை மார்ச் 30 ஞாயிற்றுக்கிழமை ஈத் அல் ஃபித்ர் கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமானும் ஈத் அல் ஃபித்ர் கொண்டாடப்படும் தேதியை அறிவித்துள்ளது.
அதன்படி, ஓமானில் நாளை மறுநாள் மார்ச் 31, திங்கள்கிழமை அன்று ஈத் அல் ஃபித்ர் கொண்டாடப்படும் என அதிகாரிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் வளைகுடா நாடுகளில் ஓமானில் மட்டும் ஒருநாள் பின்னதாக ஈத் அல் ஃபித்ர் கொண்டாடப்படவுள்ளது.
சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறை பார்க்கப்பட்டதாக தற்சமயம் அறிவிப்பு வெளியான நிலையில், ஓமானில் பிறை தென்படவில்லை என்பதால் நாளை 30வது ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும். இதனால் ஓமானிய குடியிருப்பாளர்கள் நாளை மறுநாள் ஈத் அல் ஃபித்ர் பண்டிகையை கொண்டாடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel