ADVERTISEMENT

துபாய் ஏர்போர்ட்ஸில் குறிப்பிட்ட விமானங்கள் தாமதம், ரத்து: மத்திய கிழக்கு நாடுகளில் வான்வெளி மூடப்பட்டதன் எதிரொலி..!!

Published: 13 Jun 2025, 2:35 PM |
Updated: 13 Jun 2025, 2:38 PM |
Posted By: Menaka

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றம் காரணமாக துபாய் விமான நிலையங்கள் இன்று (ஜூன் 13) ஈரான், ஈராக், ஜோர்டான் மற்றும் சிரியா மீதான வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டதால் துபாய் இன்டர்நேஷனல் (DXB) மற்றும் அல் மக்தூம் இன்டர்நேஷனல் (DWC)-இல் பல விமானங்கள் தாமதமாகிவிட்டன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக துபாய் ஏர்போர்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்த இக்கட்டான நேரத்தில் இடையூறுகளைக் குறைப்பதற்கும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவுவதற்கும் விமான நிறுவனங்கள் மற்றும் சேவை கூட்டாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகக் கூறியுள்ளது.

ADVERTISEMENT

பயணிகளுக்கான ஆலோசனை:

  • விமான நிலையைச் சரிபார்க்கவும்: விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் மறு முன்பதிவு விருப்பங்களுக்கு பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • சீக்கிரமாக வந்து சேருங்கள்: விமான நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய தாமதங்கள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்திற்கு கூடுதல் நேரத்தை அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • ஆதரவு கிடைக்கிறது: தாமதங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவவும் வழிகாட்டவும் அனைத்து டெர்மினல்களிலும் விருந்தினர் தூதர் குழுக்கள் (guest ambassador teams) நிறுத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்படும் நிலையில், விமான நிலைய ஆணையம் பயணிகளின் பொறுமை மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT