ADVERTISEMENT

துபாய்: ஷேக் சையத் சாலைக்கு அருகில் உள்ள கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!!

Published: 5 Nov 2025, 1:29 PM |
Updated: 5 Nov 2025, 1:29 PM |
Posted By: Menaka

துபாயின் ஷேக் சையத் சாலைக்கு அருகிலுள்ள அல் கூஸ் பகுதியில் உள்ள ஒரு சைக்கிள் கிடங்கில் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அதிகாரிகளின் கூற்றுப்படி, நள்ளிரவு 12:45 மணிக்கு கிடங்கில் தீ பரவத் தொடங்கியது, இதனால் பல நிலையங்களில் இருந்து துபாய் சிவில் பாதுகாப்பு பிரிவுகள் விரைவாக வரவழைக்கப்பட்டன. தீ அருகிலுள்ள இடங்களுக்கு பரவாமல் தடுக்க கடுமையான தீப்பிழம்புகள் மற்றும் அடர்ந்த புகையை எதிர்த்து குழுவினர் பணியாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, அதிகாலை 5:00 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும், யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தீ விபத்தில் சைக்கிள்கள், பேட்டரிகள் மற்றும் பல்வேறு சேமிக்கப்பட்ட பாகங்கள் எரிந்து விட்டன, எனவே, குறிப்பிடத்தக்க அளவு பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறபபடுகிறது.

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து, தீ மீண்டும் எரியாமல் இருக்க சம்பவ இடத்தில் குளிரூட்டும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன, மேலும் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறியவும், சேதத்தின் முழு அளவை மதிப்பிடவும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT