ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் தனது குடிமக்களுக்கு அவ்வப்போது பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தற்பொழுது நாடு முழுவதும் உள்ள 19 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து 1,435 எமிராட்டி குடிமக்களின், மொத்தம் 475 மில்லியன் திர்ஹம்ஸ்க்கும் அதிகமான கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த முயற்சி அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்களின் உத்தரவுகளைப் பின்பற்றுகிறது, துணைத் தலைவர், துணைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி நீதிமன்றத்தின் தலைவர் ஷேக் மன்சூர் பின் சையத் அல் நஹ்யான் அவர்களின் நெருக்கமான மேற்பார்வையுடன் கடன் அடைக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
நிதிச் சுமைகளைக் குறைத்தல், குடும்ப ஸ்திரத்தன்மையை ஆதரித்தல் மற்றும் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதில் அமீரகத் தலைமையின் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் குடிமக்கள் மீதான அழுத்தத்தைக் குறைத்து, அவர்களின் நிதி ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க உதவுவதே இதன் குறிக்கோள் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடன் தள்ளுபடிகள் பின்வருவனவற்றிற்குப் பொருந்தும்:
- மனிதாபிமான மற்றும் மருத்துவ வழக்குகள்
- குறைந்த வருமானம் கொண்ட கடனாளிகள்
- இறந்த கடனாளிகளின் குடும்பங்கள்
- குறைந்த வருமானம் கொண்ட ஓய்வு பெற்றவர்கள்
- மூத்த குடிமக்கள்
இது குறித்து வெளியான தகவல்களின் படி, வங்கிகளுடனான கடன் தீர்வுகள் ஒவ்வொரு கடனின் தன்மை மற்றும் நோக்கத்துடன் தொடர்புடைய கடுமையான சட்ட மற்றும் ஒழுங்குமுறை அளவுகோல்களின்படி மேற்கொள்ளப்படுகின்றன என்றும், அத்தியாவசிய மற்றும் தேவையான கடன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் வங்கிகளில் பின்வருவன அடங்கும்.
ADCB, எமிரேட்ஸ் NBD, ஃபர்ஸ்ட் அபுதாபி வங்கி, அபுதாபி இஸ்லாமிய வங்கி, மஷ்ரெக் வங்கி, RAKBANK, ஷார்ஜா இஸ்லாமிய வங்கி, துபாய் இஸ்லாமிய வங்கி, e&, ஐக்கிய அரபு வங்கி, அல் மஸ்ரஃப், துபாய் கமெர்ஷியல் வங்கி, HSBC, அஜ்மான் வங்கி, அம்லாக் நிதி, எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு, உம் அல் கைவைன் தேசிய வங்கி மற்றும் சிட்டி வங்கி.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel