அமீரக செய்திகள்

UAE: தடுப்பூசி போட்டுக்கொண்ட அரசு ஊழியர்களுக்கு மாதம் ஒரு முறை மட்டும் PCR டெஸ்ட்..!!

அபுதாபியில் உள்ள அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் கொரோனாவிற்கான தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள் தங்கள் பணியிடங்களுக்குள் நுழைய ஒவ்வொரு மாதமும் PCR பரிசோதனை செய்ய வேண்டும் என்று மனிதவள ஆணையம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இதுவரையிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் PCR சோதனை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், PCR சோதனைகளுக்கான செலவை ஊழியர்களே வாராந்திர அல்லது மாதாந்திர அடிப்படையில் செலுத்த வேண்டும் என்றும் அபுதாபியின் மனிதவள ஆணையம் கூறியுள்ளது.

HRA வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்களில் தற்பொழுது வரை முழுவதுமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள் அதாவது தடுப்பூசிக்கான இரண்டு டோசினையும் எடுத்துக்கொண்டு 28 நாட்கள் பூர்த்தி செய்த ஊழியர்கள் வாராந்திர PCR சோதனைகளில் இருந்து விலக்கு பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இரண்டாவது டோஸ் பெற்றவர்களில் இரண்டாவது டோஸ் பெற்று இன்னும் 28 நாட்கள் பூர்த்தி செய்யப்படாதவர்கள் மற்றும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விலக்கு பெரும் மருத்துவ சான்றிதழ் உள்ளவர்கள் ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் ஒரு முறை PCR பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலக்குகள்…

தடுப்பூசிக்கான இரண்டு டோசினையும் போட்டுக்கொண்டு அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனில் E அல்லது கோல்டன் ஸ்டார் பெற்றிருப்பவர்களுக்கு PCR சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனில் இந்த சிறப்பு ஐகானை பெற விரும்புபவர்கள் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும்.

பிற விதிகள்…

சேவை நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் அல்லது பிற வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக கடைபிடிக்க வேண்டிய மற்றொரு விதிமுறைகள் உள்ளன.

ஒரு கூட்டத்திற்காக அல்லது அதிக நேரம் தேவைப்படாத ஒரு உத்தியோகபூர்வ பணிக்காக ஒரு பொது கட்டிடத்திற்குள் நுழைய விரும்புபவர்கள், மூன்று நாட்களுக்குள் பெறப்பட்ட எதிர்மறை PCR சோதனை முடிவைக் கொண்டிருக்க வேண்டும்.

தனிமைப்படுத்துதல்…

அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் ஊழியர்களில் தடுப்பூசி பெறாதவர்களுக்கு, தனிமைப்படுத்தப்பட்ட காலம் அவர்களின் வருடாந்திர விடுப்பு நிலுவையிலிருந்து கழிக்கப்படும். இல்லையெனில் அது ஊதியம் இல்லாத விடுப்பாக கணக்கிடப்படும். அத்தகைய நபர்களுக்கு தொலைதூர வேலை பொருந்தாது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்களுக்கு தொலைதூர வேலை பொருந்தும்.

வீட்டிலிருந்து வேலை…

கர்ப்பினி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த ஊழியர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.

இ-கற்றல் மற்றும் 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்குகம் குறைவான வகுப்பில் படிக்கும் குழந்தைகளைக் கொண்டவர்களும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!