அமீரக செய்திகள்

புர்ஜ் கலீஃபாவில் நடந்த புத்தாண்டு இரவு லேசர் ஷோவை நேரில் பார்க்கலையேன்னு வருத்தமா..? அப்போ உங்களுக்குதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..

துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் அமைக்கப்பட்டிருக்கும் உலகின் மிகப்பெரிய திரையில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தாண்டு தின இரவு கொண்டாட்ட லேசர் ஷோ மற்றும் வண்ணமயமான லைட்டிங் ஷோ நிகழ்ச்சிகளை நேரில் காண தவறியவர்களில் நீங்களும் ஒருவரா..??

இல்லை, புர்ஜ் கலீஃபா அமைந்துள்ள டவுன்டவுன் பகுதிக்கு சென்றும் கூட்ட நெரிசலின் காரணமாக அருகிலிருந்து காண முடியாமல் சிறிது ஏமாற்றத்துடன் திரும்பியவர்களில் நீங்களும் ஒருவரா..?? கவலையே வேண்டாம்.. அதை மிக மிக அருகில் இருந்து காண்பதற்கான அரிய வாய்ப்பை மீண்டும் உங்களுக்கு வழங்குகிறது புர்ஜ் கலீஃபா.

2022 ம் ஆண்டு புத்தாண்டிற்காக டிசம்பர் 31 அன்று இரவு உலகின் மிக உயரமான கட்டிடத்தை ஒளிரச் செய்த லேசர் ஷோ மற்றும் ஷோ லைட்டிங் காட்சியை மீண்டும் கண்டு ரசிக்க நீங்கள் இனி ஒரு வருடம் முழுவதும் காத்திருக்க வேண்டியதில்லை. ஆம், புத்தாண்டு கொண்டாட்டத்தில் உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பிய அந்த புத்தாண்டு கொண்டாட்ட காட்சிகள் அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்காக இப்போது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை என ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த வண்ணமயமான காட்சிகளை புத்தாண்டு இரவு அன்று நேரடியாக கண்டுகளிக்க தவறிய அனைவரும் மார்ச் 31 வரையிலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் கண்டு ரசிக்கலாம். ஒவ்வொரு நாளும் நடக்கவிருக்கும் இந்த மூன்று சிறப்பு காட்சிகளை ஒலி சத்தத்திற்கு ஏற்ப நடனமாடும் துபாய் ஃபவுன்டைனுடன் சேர்ந்து கண்டு மகிழலாம்.

அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்காக நீட்டிக்கப்பட்டுள்ள இந்த புர்ஜ் கலீஃபாவின் புத்தாண்டு கொண்டாட்ட லேசர் ஷோ மற்றும் லைட்டிங் ஷோ காட்சிகள், புதன் முதல் ஞாயிறு வரை இரவு 7.45 மணி, 8.15 மணி மற்றும் 9.45 மணி என மூன்று நேரங்களில் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!