துபாய்: குளோபல் வில்லேஜ் தற்காலிகமாக மூடப்படுவதாக நிர்வாக குழு அறிவிப்பு..!!
அமீரகத்தில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக துபாயின் குளோபல் வில்லேஜ் இன்று (ஜனவரி 7, 2023) மூடப்படும் என்று குளோபல் வில்லேஜின் நிர்வாக குழு ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிவிப்பில் “தற்போதைய பாதகமான வானிலை காரணமாகவும், குளோபல் வில்லேஜ் பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களின் சௌகரியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காகவும், குளோபல் வில்லேஜ் இன்று தனது செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குளோபல் வில்லேஜ் மீண்டும் ஜனவரி 8, 2023 அன்று மாலை 4 மணி முதல் செயல்படத் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று அதிகாலை முதல் நாடு முழுவதும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தீவிர மழை பெய்யக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.