குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் வரும் இந்தியர்கள் மட்டுமே பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்ணப்பிக்க முடியும்..!! அபுதாபி தூதரகம் அறிவிப்பு..!
அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம், காலாவதியாகிய அல்லது வரும் நவம்பர் மாதம் 30 ம் தேதிக்குள் காலாவதியாகக்கூடிய பாஸ்போர்ட் அல்லது ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பு விசாக்கள் வைத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரையிலும் இந்த நிபந்தனைகளின் கீழ் வரும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவுவதைத் தவிர்ப்பதற்காக சமூக தூரத்தை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளைப் பின்பற்ற குறிப்பிட்ட அளவிலான விண்ணப்பங்கள் மட்டுமே செயல்படுத்தப்படுவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் எவருக்கேனும் அவசர பாஸ்போர்ட் சேவை தேவை இருந்தால், விண்ணப்பதாரர் தங்களின் ஆவணங்களை ஸ்கேன் செய்து அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களின், அவசர கால நிலையை [email protected] என்ற மின்னஞ்சலில் விளக்கி அனுப்பலாம் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
தூதரகம் மேலும் அறிவிக்கையில், இதுபோன்ற அனைத்து மின்னஞ்சல்களுக்கும் பதிலளித்து தேவையான சேவை வழங்கப்படும் என்றும், மேலதிக அறிவிப்பு வரும் வரை இந்தியக் குடிமக்கள் அனைவரும் மேற்கண்ட நடைமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.