UAE: அனைத்து பார்க்குகளையும் மறு அறிவிப்பு வரும் வரையில் மூட உத்தரவிட்ட ஷார்ஜா.. மோசமான வானிலையை முன்னிட்டு நடவடிக்கை..
ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் நிலையற்ற வானிலை காரணமாக எமிரேட்டில் உள்ள அனைத்து பூங்காக்களையும் முழுமையாக மூடுமாறு ஷார்ஜா நகராட்சி உத்தரவிட்டுள்ளது. நாட்டில் நிலவும் மோசமான காலநிலை தணிந்தவுடன் பூங்காக்கள் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல் கல்பா நகரில் உள்ள நகராட்சியும் நகரில் உள்ள பூங்காக்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
முன்னதாக, நாட்டின் சில பகுதிகளில் இந்த வார தொடக்கத்தில், ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய் வரை இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அமீரகத்தில் ஆங்காங்கே மழை பெய்தும் வருகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel