அமீரகத்தில் ‘ஈத் அல் ஃபித்ர்’ கொண்டாடப்படும் தேதியை அறிவித்த அமீரக அரசு..!!
அமீரகத்தின் பிறை பார்க்கும் குழுவானது குடியிருப்பாளர்களை இன்று ரமலான் மாத முடிவைக் குறிக்கும் ஷவ்வால் மாத பிறை பார்க்குமாறு கேட்டுக்கொண்ட நிலையில் இன்று பிறையானது தென்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாளானது வரும் ஏப்ரல் 10, புதன்கிழமை கொண்டாடப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் நாளை ரமலான் மாதத்தின் கடைசி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈத் அல் பித்ர் எனும் நோன்பு பெருநாளுக்கான சிறப்பு தொழுகை நாளை மறுநாள் அதிகாலையில் நாடு முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் தொழுகை திடல்களில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெறும் நேரங்கள் வெளியீடு..!!
சற்று முன்னர் சவூதி அரேபியாவில் பிறை தென்படவில்லை என அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தற்பொழுது அமீரகத்திலும் பிறை தென்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றே, கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் ஏப்ரல் 10 அன்று ஈத் அல் ஃபித்ரை கொண்டாடவிருக்கின்றன.
இதில் ஓமான் மட்டும் நாளை பிறை பார்த்த பின்னர் ஈத் அல் ஃபித்ர் எப்போது என அறிவிக்கவுள்ளது. பெரும்பாலும் மற்ற வளைகுடா நாடுகளைப் போல் அல்லாமல் ஓமான் ஒரு நாள் பின்தங்கி பெருநாளைக் கொண்டாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
غداً الثلاثاء المُتمّم لشهر #رمضان والأربعاء 10 أبريل 2024 أول أيام #عيد_الفطر السعيد في #الإمارات | وام#برق_الإمارات pic.twitter.com/n2wAsqvMi8
— برق الإمارات (@UAE_BARQ) April 8, 2024
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel