அபுதாபி காவல்துறையானது அவ்வப்போது சாலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. அதில் சமீபத்தில் ஒரு புதிய வீடியோவை அபுதாபி காவல்துறை வெளியிட்டது. அந்த வீடியோவில், வாகன ஓட்டிகள் கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகளை காண்பித்து வாகன ஓட்டிகள் கவனத்துடன் ஓட்டுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
சிசிடிவி கேமரா பதிவுகளின் தொகுப்பான இந்த வீடியோ, இன்டர்செக்ஷனில் கார்கள் மோதி விபத்துகளை ஏற்படுத்திய பல நிகழ்வுகளைக் காட்டியுள்ளது.
சாலையில் ஏற்படும் சிறிய கவனச்சிதறல்கள் கூட திடீர் பாதை விலகல்களுக்கு வழிவகுக்கும் என்று காவல்துறை கூறியதுடன் வாகன ஓட்டிகள் இணையத்தில் உலாவ, சமூக ஊடகங்களைப் பயன்படுத்த, அழைப்புகளைச் செய்ய அல்லது புகைப்படம் எடுக்க வாகனம் ஓட்டும் போது தங்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது.
மேலும் “வாகனம் ஓட்டும்போது சாலையில் கவனம் செலுத்தாததால் போக்குவரத்து விபத்துக்களை ஏற்படுத்துவதன் மூலம் இத்தகைய நடத்தை ஆபத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறியுள்ளது.
#فيديو | #شرطة_أبوظبي تدعو السائقين بعدم الانشغال بالهاتف أثناء عبور "الإشارة الضوئية"
— شرطة أبوظبي (@ADPoliceHQ) January 2, 2026
دعت شرطة أبوظبي السائقين بعدم الانشغال بغير الطريق أثناء عبور التقاطعات والإشارات الضوئية ونبهت للنتائج السلبية التي قد تقع على الطريق عند التشتت الذهني للسائق وعبور الاشارة الضوئية خاصة… pic.twitter.com/tmf5R7kPLX
#فيديو | #شرطة_أبوظبي تدعو السائقين بعدم الانشغال بالهاتف أثناء عبور "الإشارة الضوئية"
— شرطة أبوظبي (@ADPoliceHQ) January 2, 2026
دعت شرطة أبوظبي السائقين بعدم الانشغال بغير الطريق أثناء عبور التقاطعات والإشارات الضوئية ونبهت للنتائج السلبية التي قد تقع على الطريق عند التشتت الذهني للسائق وعبور الاشارة الضوئية خاصة… pic.twitter.com/tmf5R7kPLX
அத்துடன் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும், பாதசாரிகள், சாலை அடையாளங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கவனம் செலுத்தவும், விபத்துகளைத் தவிர்க்க போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் ஓட்டுநர்களை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அபுதாபியில் வாகன பறிமுதல் தொடர்பான 2020 ஆம் ஆண்டின் சட்டம் எண் (5) படி ரெட் சிக்னலில் வாகனம் ஓட்டினால் 1,000 திர்ஹம்ஸ் அபராதம், 12 பிளாக் பாயிண்ட்ஸ் மற்றும் 30 நாட்களுக்கு வாகன பறிமுதல் விதிக்கப்படும் என்பதை குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிப்பதற்கான கட்டணம் திர்ஹம்ஸ் 50,000 ஆகும், மேலும் உரிமம் திரும்பப் பெறப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வாகனம் வெளியீட்டு கட்டணம் செலுத்தப்படும் வரை, அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்கு பறிமுதல் செய்யப்படும். நிலுவைத் தொகை தீர்க்கப்படாவிட்டால், வாகனம் பொது ஏலத்தில் விற்பனைக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel