அமீரக செய்திகள்

துபாயின் அல் குசைஸ் பகுதியில் இன்று ஏற்பட்ட மாபெரும் தீவிபத்து..!!

துபாயில் உள்ள அல் குசைஸ் தொழில்துறை பகுதியில் இன்று திடீரென மாபெரும் தீவிபத்து நிகழ்ந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் கருமை நிற புகையால் சூழப்பட்டதாக அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 10 மணியளவில் அல் குசைஸ் தொழில்துறை பகுதியில் உள்ள டமாஸ்கஸ் ஸ்ட்ரீட்டிற்கு இணையாக இருக்கும் மற்றொரு சாலையில் உள்ள ஒரு கிடங்கில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

தீ்விபத்து நிகழ்ந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!