நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்தால் மீண்டும் லாக்டவுன் அமலுக்கு வர வாய்ப்பு..!! குவைத் சுகாதார அமைச்சகம் தகவல்..!!
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் கொரோனா தொற்றுநோய்கள் அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து, குவைத்தின் சுகாதார அமைச்சகம் (MoH) நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கொரோனா வைரஸ் (கோவிட் -19) நிலைமை குறித்து விழிப்புடன் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அப்துல்லா அல் சனத் அவர்கள் கூறுகையில், “நோய்த்தொற்றுகள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், இறப்புக்கள் மற்றும் ICU-க்கள் சேர்க்கை உள்ளிட்ட கொரோனா தொடர்பான புள்ளிவிவரங்களை அமைச்சகம் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது. மேலும் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான கிடைக்கக்கூடிய விருப்பங்களைத் தூண்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “தொற்றுநோய் நிலைமைகளின் தரவுகளின் அடிப்படையில், நோய்த்தொற்று வீதம் தொடர்ந்து அதிகரித்து வந்தால், சில நாடுகளில் சமீபத்தில் அறிவித்ததை போன்றே பகுதியளவு லாக்டவுன் குவைத்தில் மீண்டும் செயல்படுத்த வாய்ப்பிருக்கின்றது” என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
“பொது சுகாதாரம் மற்றும் தொற்றுநோயியல் துறையைச் சேர்ந்த ஒரு நிபுணர் குழுவினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அமைச்சகம், நிலைமையின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் தொற்றுநோயைப் பரப்புவதைத் தடுப்பதற்கான சாத்தியமான விருப்பங்கள் குறித்து அமைச்சரவையில் தவறாமல் அறிக்கை செய்கிறது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த வைரஸ் நோயிலிருந்து பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க அமைச்சகம் தெரிவித்துள்ள அணைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.