UAE: அபுதாபியில் கட்டப்பட்டு வரும் முதல் கோயிலின் பணிகளைப் பாா்வையிட்ட இந்திய அமைச்சர் ஜெய்சங்கா்..!
அமீரகத்திற்கு 3 நாள் அரசுமுறை பயணமாக வந்துள்ளார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அபுதாபியில் கட்டப்பட்டு வரும் முதல் கோவில் பணிகளைப் பாா்வையிட்டுள்ளார். இது குறித்து, அமீரகத்திலுள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரின் அமீரக சுற்றுப்பயணத்தின்போது அபுதாபியில் நாராயணன் கோயில் கட்டுமானப் பணிகளை அவா் பாா்வையிட்டாா். கோயில் கட்டுவதற்காக இந்தியா்கள் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டிய அவா், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக இக்கோயில் திகழும் என குறிப்பிட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சுமாா் 55,000 சதுர மீட்டா் நிலத்தில் அமையவிருக்கும் இந்த கோயிலில், இந்திய சிற்பக் கலைஞா்கள் மூலம் கல் வேலைப்பாடுகள் நடைபெறவுள்ளன. மேலும் தனது இந்தப் பயணத்தின்போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சா் ஷேக் அப்துல்லா பின் சையதுடன் இருதரப்பு உறவுகள் குறித்து ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.