குவைத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்..!! கடந்த ஒரு நாளில் மட்டும் 900 பேருக்கு கொரோனா தொற்று..!!
குவைத்தில் நேற்று வரை ஒரு நாளைக்கு 700 க்கும் குறைவான நபர்களுக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 900 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள தகவலின்படி, குவைத்தில் இன்று (வியாழக்கிழமை, செப்டம்பர் 3, 2020) புதிதாக 900 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குவைத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 87,378 ஆக உயர்ந்துள்ளது.
குவைத்தில் இன்று கொரோனாவிற்கு ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 536 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்றைய நாளில் மட்டும் 582 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 78,791 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.