கொரோனா கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகளை அறிவித்த ஓமான்… என்னென்ன..??
ஓமானில் தற்போது நிலவி வரும் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு கொரோனாவிற்கான உச்சக்குழு புதிய முடிவுகளை வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பானது சற்றே குறைந்திருப்பதால் அதனடிப்படையில் தற்பொழுது வெளியிட்டுள்ள முடிவுகளில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அவை
1. நாட்டில் வெள்ளிக்கிழமை தொழுகையை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. அதனுடன் தினசரி ஐந்து வேளை தொழுகைகளை மேற்கொள்ளவும் ஒவ்வொரு மசூதியிலும் 50 சதவீதத்திற்கு மேல் தொழுபவர்களின் எண்ணிக்கை இருக்கக்கூடாது.
2. நாட்டின் நிர்வாக மற்றும் பிற சட்ட நிறுவனங்களின் பிரிவுகளில் பணியிடங்களில் குறிப்பிட்ட குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் இருக்க வேண்டும் என்ற முடிவானது விலக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நோய் பரவுவதைத் தவிர்க்க கொரோனா சம்பந்தமாக அமைக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைவரும் இணங்க வேண்டும்.
3. அனைத்து பங்கேற்பாளர்களும் கொரோனா தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட்டதற்கான ஆதாரத்தைக் காட்டினால், ஒவ்வொரு இடத்திலும் 70 சதவிகிதத் திறனில் பொது அரங்குகளை இயக்க அனுமதி வழங்கப்படும்.
4. உள்ளூர் மற்றும் சர்வதேச மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்த அனுமதித்தல். இந்தச் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த அமைப்பாளர்கள் ஒவ்வொரு இடத்தின் திறனிலும் 70 சதவீதத்திற்கும் அதிகமாக வருகை இருக்காதவாறு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும்.
5. 2021-2022 ஆம் ஆண்டின் இரண்டாம் செமஸ்டர் மூலம் கல்வியைத் தீர்மானிப்பவர்கள் பற்றிய அறிக்கையை கல்வி அமைச்சகம் வெளியிட வேண்டும்.
வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் பிற வணிக விற்பனை நிலையங்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்குள் நுழைவதற்கு தடுப்பூசியை முன்நிபந்தனையாக மாற்ற வேண்டுமென அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களை கொரோனா உச்சக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
அனைத்து பொது இடங்களிலும் மூடிய பகுதிகளிலும் முக கவசம் அணிதல், சமூக தூரத்தை கடைபிடித்தல், கூட்டங்கள் மற்றும் நெரிசலான பகுதிகளை தவிர்த்தல் மற்றும் கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைவரும் இணங்குமாறு உச்சக் குழு கேட்டுக்கொள்கிறது.
12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸினை போட்டுக்கொண்ட பிறகு மூன்றாவது டோஸ் போட்டுக்கொள்ளுமாறும் குழு வலியுறுத்தியுள்ளது.