இந்திய செய்திகள்

இந்தியா செல்லும் பயணிகள் ஏர்போர்ட்டில் இறங்கியவுடன் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் பற்றிய முழு விபரம்…!!!

உலகளவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் பாதிப்பையொட்டி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 174 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் இந்த வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, இந்தியாவிற்கு வரும் ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், குவைத் போன்ற குறிப்பிட்ட நாட்டு பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலைக் கட்டாயமாக்கியுள்ளது.

இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதன்கிழமை பயணிகள் நாட்டிற்கு வந்தவுடன் மேற்கொள்ளப்படும் சோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கான நிலையான இயக்க நடைமுறைகளை (Standard Operating Procedures-SOP) வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு கட்டாயமாக 14 நாள் தனிமைப்படுத்தலை இந்தியா அறிவித்ததையடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட இடம் குறித்து தெளிவு இல்லாததினால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலத்திற்கென குறிப்பிட்ட இடங்களை தனிமைப்படுத்தப்படுவதற்காக ஒதுக்கியுள்ளன. மேலும் ஒவ்வொரு பயணிகளின் உடல்நிலையை பொறுத்து பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட இடம் தீர்மானிக்கப்படும் என்று கூறியுள்ளது.

“சுகாதார மற்றும் விமான நிலைய அதிகாரிகளால் விமான நிலையத்திற்கு வருகை தரும் ஒவ்வொரு பயணியின் உடல்நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் அடிப்படையில் அவர்களுக்கான தனிமைப்படுத்தலுக்கான முடிவு எடுக்கப்படும். அவர்களின் உடல் நிலைமையைப் பொறுத்து, அவர்கள் நியமிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் அல்லது வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதற்கு கேட்டுக்கொள்ளப்படுவார்கள்” என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் தனக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றை தெரிந்தே மறைப்பார்கள் எனில் அவர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அறிகுறிகளைக் கொண்டவர்கள் தொற்றுநோயை மறைத்து மற்றவர்களுக்கும் பரப்புவது கண்டறியப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும் என்று கேரளாவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தொற்றுநோயிலிருந்து விடுபட்ட பிறகு அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தல் மற்றும் அரசு நியமிக்கப்பட்ட இடங்களில் தனிமைப்படுத்துதல்

இந்திய அரசின் அறிவிப்பின்படி, விமான நிலையங்களில் வரும் அனைத்து பயணிகளும் பரிசோதனை மேற்கொள்ளப்படுவார்கள், அவர்களில் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள்.

அவர்களின் பாஸ்போர்ட், வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட ஆலோசனை மற்றும் அவர்களிடமிருந்து ஒரு உறுதி அறிக்கையை சேகரித்த பின்னர் அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள்.

இவர்கள் கண்டிப்பாக வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் இருக்க வேண்டும், இல்லையெனில் விதிகளின் படி தண்டனை நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், “பாதிப்படைந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தனிமைப்படுத்தி, மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள், ஆனால், நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு அவர்களுக்கு இருந்தால், பூந்தமல்லிக்கு அழைத்துச்சென்று விசாரிப்பார்கள். மேலும் சிலரை வீட்டிலேயே தனிமைப்படுத்துகிறோம். இந்த முறை சரியாக செயல்படுவதினால்தான் தமிழ்நாட்டில் கொரோனா நோய்தொற்று பரவல் அதிகம் இல்லை” என்று கூறியுள்ளார்.

வீட்டு தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்ட பயணிகள், அமைச்சகத்தின் கீழுள்ள ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புக்கு குழுவுடன் இணைக்கப்பட்டு அவர்களுடைய உடல் நலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்

இந்தியாவில் தரையிறங்கிய பின் பயணிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்:

1. COVID -19 பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் பயணிகளை முறையாக பரிசோதனை செய்யுமாறு விமான நிலைய அதிகாரிகளுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

2. பிரத்யேக ஏரோபிரிட்ஜ்களில் இருந்து, பயணிகள் விமான ஊழியர்களால் ஆரம்ப வெப்ப பரிசோதனைக்காக (Initial Thermal Screening) APHO சுகாதார கவுண்டர்களுக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு கொரோனா அறிகுறி உடைய பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு, நியமிக்கப்பட்ட மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள்.

3. பரிசோதனை முடிந்த பிறகு, மீதமுள்ள அறிகுறியற்ற பயணிகள் அவர்களின் பாஸ்போர்டுகளுடன், நியமிக்கப்பட்ட இமிகிரேஷன் கவுண்டர்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

4. விமான ஊழியர்கள், விமானங்களில் இருந்து வரும் பயணிகள் தங்கள் SRF (Self Reporting Form – SRF) களை முறையாக நிரப்புவதை உறுதி செய்வார்கள்.

5. இமிகிரேஷன் முடிந்த பின்னர், பயணிகளின் பாஸ்போர்ட் இமிகிரேஷன் அதிகாரிகளால் தக்கவைத்துக் கொள்ளப்படும்.

6. பயணிகள் 30 பேர் கொண்ட குழுக்களாக எஸ்கார்ட் குழுவிடம் (24×7 – ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழு) ஒப்படைக்கப்படுவார்கள். இந்த பயணிகளின் பாஸ்போர்ட்களை இமிகிரேஷன் அதிகாரிகள் குழுவின் தலைமை அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள். பாஸ்போர்ட் எக்காரணத்தைக் கொண்டும் பயணிகளுக்கு கொடுக்கப்படாது.

7. எஸ்கார்ட் குழு, பயணிகளுடன் சேர்ந்து சாமான்களை சேகரிக்க லக்கேஜ் பெல்ட்களுக்கு செல்ல வேண்டும். ஏதேனும் / சில பயணிகளின் விஷயத்தில் ஏதேனும் தாமதம் / காணாமல் போன சாமான்கள் இருந்தால், அந்தந்த பயணிகள் ஒரு குழு உறுப்பினருடன் பின்னால் இருக்க வேண்டும், மீதமுள்ள அணி மற்றும் பயணிகள் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர வேண்டும்.

8. சுங்க அதிகாரிகள் பயணிகளை அனுமதிப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அந்தந்த பயணிகள் 5 பேர் கொண்ட எஸ்கார்ட் குழு உறுப்பினருடன் பின்னால் இருக்க வேண்டும், அதே நேரத்தில் மீதமுள்ள அணியும் பயணிகளும் அடுத்த வழிமுறைகளைத் தொடர வேண்டும்.

9. பயணிகள் அனைவரும் அந்த 5 பேர் கொண்ட குழுவுடன், மாநில அரசால் நிர்வகிக்கப்படும் முன்கூட்டியே நியமிக்கப்பட்ட பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கு பொறுப்பில் இருக்கும் அதிகாரி பயணிகளை மேற்பார்வை இடுதல் மற்றும் ஒருங்கிணைத்தல் போன்ற வழிமுறைகளை செய்வார்.

10. முன்கூட்டியே நியமிக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் பாரா மருத்துவ ஊழியர்களால் நிர்வகிக்கப்படும் ஐந்து ஸ்க்ரீன் கவுண்டர்கள் இருக்கும்.

11. எஸ்கார்ட் குழு கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பாளருக்கு தகவல் அறிவிப்பதைத் தொடர்ந்து, அந்தக் குழுவின் கீழுள்ள பயணிகளுக்கென ஒரு தனி
கவுண்டரை ஒதுக்குவார்கள்.

12. ஒதுக்கப்பட்ட கவுண்டரில், அந்தக்குழுவில் உள்ள அனைத்து பயணிகளின் பாஸ்போர்ட்டுகள் எஸ்கார்ட் குழுவின் தலைமை அதிகாரியால் அங்கு பொறுப்பில் இருக்கும் மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.

இங்கே அனைத்து பயணிகளும் ஸ்க்ரீன் செய்யப்பட்டு, தனிமைப்படுத்தலுக்கான நிலையான இயக்க நடைமுறை (SOP) செயல்படுத்தப்படும் என்று அரசு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!