அமீரக செய்திகள்

அமீரகத்தில் 51°c- ஐ எட்டிய வெப்பநிலை..!! வரும் நாட்களில் வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தகவல்..!!

அமீரகத்தில் கோடைகாலம் ஆரம்பித்ததை முன்னிட்டு நாடு முழுவதும் பரவலாக அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. வரும் நாட்களில் வெயில் மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை மையம் (NCM) அறிவித்துள்ளது.

NCM அறிக்கையின் படி, அல் அய்னில் நேற்று (வெள்ளிக்கிழமை) நாட்டின் அதிகபட்ச வெப்பநிலையான 51 ° C பதிவாகியதாக தெரிவித்துள்ளது.

இன்று காலை துபாய் மற்றும் அபுதாபியின் சில பகுதிகளில் அடர்த்தியான மூடுபனி நிலவியதால், தெரிவுநிலை குறைந்ததாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

NCM அதன் தினசரி வானிலை முன்னறிவிப்பில், அமீரகத்தில் பகல் நேரத்தில் மிகவும் வெப்பமாக இருக்கும் என்று கூறியுள்ளது.

இருப்பினும், கிழக்கு கடற்கரைப் பகுதிகள் தாழ்வான மற்றும் வெப்பச்சலன மேகங்களால் ஓரளவு மேகமூட்டமான வானங்களைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவை நிலப்பகுதியில் நிலவும் அதிக மேற்பரப்பு வெப்பநிலை காரணமாக உருவாகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை இன்று மீண்டும் 49 ° C ஐ கடக்கும். துபாய், ஷார்ஜா உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில், வெப்பநிலை அதிகபட்சம் 40-45 ° C வரை இருக்கும் என்றும் நாட்டின் உள் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 44-49 ° C க்கு இடையில் இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மலைப்பகுதிகளில், வெப்பநிலை அதிகபட்சம் 32-38 ° C க்கு இடையில் இருக்கும்.

மேலும், ஈரப்பதம் நாட்டின் கடலோர மற்றும் உள் பகுதிகளில் 95 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக ஈரப்பதம் காரணமாக இரவில் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மூடுபனி ஏற்படும் என்று கூறப்படுகிறது.

அத்துடன் மணிக்கு 10 முதல் 20 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும், சில நேரங்களில் மணிக்கு 30 வேகத்தை அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!