வளைகுடா செய்திகள்

கத்தாரில் நடந்த கோர விபத்து… இரண்டு தமிழர்கள் உட்பட இந்தியர்கள் 5 பேர் பலி..!!

கத்தாரில் அல் கோர் மேம்பாலத்தில் கடந்த புதன்கிழமை அன்று இரவு நடந்த கோரமான சாலை விபத்தில், இரண்டு தமிழர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த 3 பேர் என ஐந்து இந்தியர்கள் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இருவர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்களின் நண்பர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் சங்கர் (38), அவரது மனைவி நாகலட்சுமி சந்திரசேகரன் (33) ஆகிய இருவரும் மற்றும் கொல்லம் மாநிலத்தை சேர்ந்த ரோஷின் ஜான் (38), அவரது மனைவி ஆன்சி கோமஸ் (30), அவரது சகோதரர் ஜிஜோ கோமஸ் (34) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் சென்ற வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் மோதியதால், அது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் கீழே விழுந்துள்ளது. இதில் இந்த ஐவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், விபத்தில் உயிர் பிழைத்த ரோஷின்-ஆன்சி தம்பதியினரின் மகன் அல்கோரில் உள்ள மருத்துவ மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இறந்தவர்களின் உடல்கள் தற்போது அல்கோரில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இறந்தவர்களின் உடல்களை இந்தியாவில் உள்ள அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!