வேலையை இழந்து தவித்த தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!! ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனார்..!!
ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆவதெல்லாம் வெறும் சினிமாவில் மட்டுமே கண்டிருப்போம். தற்பொழுது நிஜத்திலும் தமிழர் ஒருவருக்கு நடந்திருக்கின்றது. சமீபத்தில் துபாயில் வசித்து வரும் தமிழர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
துபாயில் நடந்த மஹ்சூஸ் மில்லியனர் டிராவில் இரண்டாவது பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் வேலையை இழந்த துபாய் குடியிருப்பாளராக இருக்கும் தமிழருக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்பம் கிடைத்துள்ளது. அவர் இதில் வென்றதன் மூலம் 500,000 திர்ஹம் (இந்திய ரூபாயில் ஒரு கோடிக்கும் மேல்) பரிசுத்தொகையை பெற்றுள்ளார்.
53 வயதான நஸீர் அலி ஈத் அல் அத்ஹாவிற்காக தனது குடும்பத்திற்கு பணம் எப்படி அனுப்புவது என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவர் மஹ்சூஸ் டிராவில் வெற்றி பெற்றிருக்கிறார். பணம் எனக்கு இப்போது மிகவும் தேவையாக இருக்கின்ற நிலையில் கிடைத்துள்ள இந்த பரிசுத்தொகையை தனது வாழ்க்கையின் சிறந்த பரிசு என்று நஸீர் அலி கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுநோயால் சில மாதங்களுக்கு முன்பு நசீர் அலி தனது வேலையை இழந்துள்ளார். மேலும் அவர் குடும்பத்தில் இவர் மட்டுமே உழைப்பதால், அவரது குடும்பம் இவரைச் சார்ந்தே இருக்கின்றது. இதில் அவர் தனது வேலையை இழந்ததால் பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், “நான் சில மாதங்களாக வேலையில்லாமல் இருக்கிறேன். இந்த நிச்சயமற்ற நேரத்தில் செலவினங்களைக் குறைக்க நான் எனது குடும்பத்தை அமீரகத்தில் இருந்து சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப வேண்டியிருந்தது. அவர்கள் சென்ற பின்னர் நான் தனிமையாக உணர்ந்தேன், ஆனால் நான் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. விதியின் சக்தியை நான் எப்போதும் நம்பினேன். மஹூஸுடனான எனது பெரிய வெற்றி நம்பிக்கையும் நேர்மறையும் எப்போதும் வாழ்க்கையில் பெரிய விஷயங்களை ஈர்க்கிறது என்பதற்கு சான்றாகும் ” என்று கூறியுள்ளார்.
இவர் 34 வது வாராந்திர லைவ் மஹ்சூஸ் டிராவை மேலும் ஒரு அதிர்ஷ்ட வெற்றியாளருடன் வென்றிருக்கிறார். இந்த இருவருக்கும் ஆறு எண்களில் ஐந்து எண்கள் பொருத்தியிருந்ததால் இரண்டாம் பரிசான 1 மில்லியன் திர்ஹமை இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிடைத்த பணத்தை எதிர்காலத்தில் ஒரு தொழில்முனைவோராக வேண்டும் என்ற தனது நீண்டகால கனவை நிறைவேற்ற பயன்படுத்துவேன் என்று நசீர் அலி கூறியிருக்கிறார்.
“துபாயில் எனது சொந்த உணவு விடுதியைத் தொடங்க வேண்டும் என்று நான் எப்போதும் கனவு கொண்டிருப்பேன். ஆனால் என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதனுக்கு இது சாத்தியமில்லை என்று நினைத்தேன். ஆனால் அனைத்துமே சாத்தியம் என்பதை இப்போது நான் உறுதியாக அறிவேன். மஹூசுஸுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார் நசீர் அலி.
தொடர்ந்து அவர் கூறுகையில், “நான் எனது சொந்தத் தொழிலைத் தொடங்கியதும், எனது குடும்பத்தை மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து வருவேன். அந்த நல்ல நாட்கள் திரும்புவதற்காக என் மனைவியும் இரண்டு குழந்தைகளும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நாங்கள் நான்கு பேரும் மீண்டும் ஒன்றாக இருப்பதற்கு நான் மிகவும் ஆவலாக உள்ளேன்” எனக் கூறியுள்ளார்
பல மாதங்களாக வேலையில்லாமல் இருந்ததால் தான் அனுபவித்த கஷ்டங்களை மறக்காமல், இதேபோன்ற சூழ்நிலைகளில் மற்றவர்களுக்கு உதவ தனது வெற்றிகளில் ஒரு பகுதியையும் ஒதுக்குவேன் என்றும் நசீர் அலி கூறியுள்ளார்.
“நான் வேலை தேடும் போது கஷ்டங்களையும் ஏமாற்றங்களையும் கண்டிருக்கிறேன். வேலை இல்லாமல் இருப்பது எப்படி இருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும். எனவே, நான் வேலையில்லாமல் தவிக்கும் நபர்களுக்கு ஆதரவு கொடுப்பேன்.,இதனால் அவர்கள் நம்பிக்கையை இழக்க மாட்டார்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றி நேர்மறையாகவும் நம்பிக்கையுடனும் இருக்க முடியும்”என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
“மஹூசுஸ் டிராவில் கலந்து கொண்டு தங்கள் அதிர்ஷ்டத்தை தொடர்ந்து முயற்சிக்கும்படி அனைவருக்கும் நான் அறிவுறுத்துகிறேன், ஒரு நாள் அவர்களும் தங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியும்” என்று நசீர் அலி தெரிவித்துள்ளார்.
www.mahzooz.ae வழியாக பதிவுசெய்து ஒரு பாட்டில் தண்ணீரை வாங்குவதன் மூலம் மஹ்சூஸில் பங்கேற்கலாம்.
வாங்கிய ஒவ்வொரு பாட்டில் தண்ணீரும் (35 திர்ஹம்) டிராவில் கலந்து கொள்வதற்கான தகுதியை வழங்குகிறது.
அடுத்த டிரா ஜூலை 24, 2021 சனிக்கிழமை ஐக்கிய அரபு அமீரக நேரப்படி இரவு 9:00 மணிக்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.