அமீரக செய்திகள்

துபாயின் குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட மாபெரும் தீவிபத்து..!!

துபாயின் அல் பர்ஷா பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் திடீரென மாபெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தையொட்டி அந்த பகுதி முழுவதும் கடுமையான கரிய நிற புகையால் சூழப்பட்டுள்ளது. துபாயின் அல் பர்ஷா 1 பகுதியில் மால் ஆஃப் தி எமிரேட்ஸிற்கு பின்னால் இருக்கும் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் இந்த தீவிபத்து நிகழ்ந்துள்ளது.

தீவிபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக இருப்பதாக அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீவிபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

அதே நேரத்தில் இந்த தீயினை அணைக்க பாதுகாப்பு குழுவினர் உடனடியாக வந்து முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் தெரியவரும் என கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!