அமீரக செய்திகள்

வெளிநாட்டவர்களுக்காக 5 வருடத்திற்கான “புதிய விசாவை” அறிமுகம் செய்துள்ள துபாய்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது வசிக்கக்கூடிய அமீரக குடியிருப்பாளர்கள் அல்லது அமீரகத்திற்கு வெளியே வேறு ஒரு நாட்டில் வசிக்கக்கூடியவர்களில், 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 5 வருடத்திற்கான “ரிட்டயர்மெண்ட் விசா (Retirement Visa)” எனும் ஒரு புதிய விசாவினை துபாய் அரசு அறிமுகம் செய்துள்ளது. ஓய்வுபெற்றவர்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்படும் இந்த புதிய 5 வருடத்திற்கான விசாவினை பெறுவதற்கு துபாய் அரசு விதித்துள்ள நிபந்தனைகளை பூர்த்திசெய்யக்கூடிய எவரும் இந்த விசாவினை பெற விண்ணப்பிக்கலாம் எனவும் துபாய் அரசு கூறியுள்ளது.

துபாய் அரசின் புதிய விசாவினை பெற, ஓய்வு பெற்றவர் அமீரகத்தில் செய்துள்ள முதலீடுகள் அல்லது அவர் பணிபுரிந்ததற்காக பெறும் ஓய்வூதியங்களிலிருந்து மாதம் 20,000 திர்ஹம்ஸ் வருமானமாக பெற வேண்டும் எனவும், அல்லது ஓய்வு பெற்றவருக்கு 1 மில்லியன் திர்ஹம்ஸ் இருப்பு தொகையாக இருக்க வேண்டும் எனவும், அல்லது துபாயில் 2 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான அளவில் சொத்து வைத்திருக்க வேண்டும் எனவும் நிபந்தனைகளாக துபாய் அரசு விதித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகம் வெளிநாட்டு குடியிருப்பாளர்களுக்காக நீண்டகால குடியிருப்பு விசாக்களுக்கான ஒரு முறையை நடைமுறைப்படுத்தியது. அதன் மூலம் 5 மற்றும் 10 ஆண்டு விசா பெறும் வெளிநாட்டவர்கள், உள்ளூர் ஸ்பான்சர் தேவை இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழவும், வேலை செய்யவும், படிக்கவும் மற்றும் வணிகத்தில் 100 சதவீத ஓனர்ஷிப் முறையில் தொழில் தொடங்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!