வளைகுடா செய்திகள்

மஸ்கட், சலாலா விமான நிலையங்களில் டிரைவ் த்ரூ பரிசோதனை மையம் திறப்பு.. முன்பதிவு அவசியம்..!!

ஓமானில் வரும் வியாழக்கிழமை முதல் மஸ்கட் மற்றும் சலாலா சர்வதேச விமான நிலையங்களில் கொரோனாவிற்கான PCR சோதனையை மேற்கொள்ள, பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்து விமான நிலையம் வெளியிட்டுள்ள Tarassud+ அப்ளிகேஷன் மூலம் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மஸ்கட் மற்றும் சலாலா விமான நிலையங்கள் சார்பாக ஆன்லைனில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”PCR பரிசோதனை மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கு அக்டோபர் 1 ஆம் தேதி முதல், வாகனங்களில் இருந்தே கொரோனாவிற்கான PCR சோதனை மேற்கொள்ளப்படும். சோதனையை மேற்கொள்ள விரும்புவோர் முன்கூட்டியே முன்பதிவு செய்து OMR 19 கட்டணத்தை Tarassud+ அப்ளிகேஷன் மூலம் செலுத்த வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!