வளைகுடா செய்திகள்
ஓமானில் கடந்த மூன்று நாட்களில் 1,657 பேருக்கு கொரோனா பாதிப்பு..!! 30 பேர் உயிரிழப்பு ..!!
ஓமானில் கடந்த மூன்று நாட்களில் புதிதாக 1,657 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் ஓமானில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 109,953 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், புதிதாக 30 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் இதனால் ஓமானில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,101 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 95,624 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.